22 வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் டாடா ஸ்டீல்..

22 வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் டாடா ஸ்டீல்.. மாஸ் தான் போங்க..! இந்திய ரயில்வே துறை தனது மொத்த கட்டமைப்பையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இணையாகவும், மேம்ப்பட்ட முறையில் மாற்றி ரயிலின் வேகம் முதல் மக்களுக்கான சேவை தரம் வரையில் அனைத்தையும் மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இப்புதிய முயற்சியில் வந்தே பாரத் ரயில்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில் இதன் எண்ணிக்கையை பெரிய அளவில் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் இந்திய ரயில்வே துறை டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கீழ் டாடா ஸ்டீல் நிறுவனம் வரும் ஆண்டில் நாட்டின் அதிவேக மற்றும் பல்வேறு நவீன அம்சங்கள் நிறைந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-ன் 22 ரயில்களை தயாரிக்க உள்ளது. இந்தியா ரயில்வே துறையை நவீனமயமாக்குவதில் வந்த பாரத் முக்கிய இடத்தில் உள்ளது.

ரயில்வே அமைச்சகம் ரயில்வே அமைச்சகம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 200 வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. மேலும் வந்தே பாரத்-ன் முதல் ஸ்லீப்பர் ரயில் பெட்டியை 2024 முதல் காலாண்டில் இயக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. டாடா ஸ்டீல் இந்த முக்கியமான இலக்குகளை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே மற்றும் டாடா ஸ்டீல் இடையே உற்பத்திப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான பல திட்டங்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையான ரயில்வே போக்குவரத்தை நவீனமயமாக்குவதில் டாடா ஸ்டீல் இணைந்துள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் உள்ள இருக்கைகள், முதல் வகுப்பு ஏசி முதல் மூன்றாம் தர ஏசி பெட்டிகள் வரை, இனி டாடா ஸ்டீல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும். ரயிலின் Linke Hofmann Busch (LHB) பெட்டிகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தமும் டாடா ஸ்டீல் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன் கீழ் பேனல்கள், ஜன்னல்கள் மற்றும் ரயில்வேயின் கட்டமைப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.பன்னாட்டு ஸ்டீல் நிறுவனங்கள் இது போக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ​​ரயில்களின் உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக, பன்னாட்டு ஸ்டீல் நிறுவனத்திடம், இந்திய ரயில்வே துறை சுமார் 145 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த உதிரிபாகங்களின் உற்பத்தி அடுத்த 12 மாதங்களில் முடிக்கப்பட உள்ளது. சிறப்பு சீட் வடிவமைப்பு டாடா ஸ்டீல் தற்போது 16 கோச் பெட்டிகள் கொண்ட 22 ரயில்களை தயாரிக்க உள்ளது. இந்த 22 ரயில்களில் இருக்கும் சீட்கள் அனைத்தும் விமானத்தில் இருப்பது போல் 180 டிகிரி வரையில் திருப்ப கூடிய வகையில் சிறப்பு வடிவமைப்பை கொண்டு இருக்கும் என டாடா ஸ்டீல் துணை தலைவர் Debashish Bhattacharya தெரிவித்துள்ளார்.

சந்திராஷ்டம நாளில் மன உளைச்சல்.. நல்ல காரியம் செய்யலாமா? 12 ராசிக்காரர்களுக்கும் பரிகாரம்

ஒரு சில நாட்களில் காரணமே pஇல்லாமல் எரிச்சலும் கோபமும் வரும். காலண்டரை பார்த்தால் அன்றைய தினம் சந்திராஷ்டமம் என்று இருக்கும்? சந்திராஷ்டம நாட்களில் நல்ல காரியம் செய்யலாமா? எந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம். ஒருசிலருக்கு மாதத்தில் சில நாட்கள் மன உளைச்சலும் கோபமும் வரும். எதற்கெடுத்தாலும் எரிச்சலாக பேசி பதில் சொல்வார்கள். அன்றைய தினம் காலண்டரைப்பார்த்தால் அவர்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் என்று இருக்கும். ஒருவர் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்று ஜோதிடத்தில் கூறுகின்றனர்.மனோகாரகன் சந்திரன் எட்டாம் இடத்தில் மறையும் போது மன உளைச்சல் ஏற்படுவது இயற்கைத்தானே. சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும். ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.

சந்திரனை மனநிலைக்கு உரியவன் என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மறைவு ஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்றவை ஏற்படும் எனவேதான் சந்திராஷ்டம நாட்களில் பெரும்பாலும் மவுன விரதம் இருப்பது நல்லது என்கின்றனர் ஜோதிடர்கள். மனோகாரகனான சந்திரன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் நீசம் அடைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் வரும்போது மேஷ ராசிக்காரர்களுக்கு எண்ண அதிர்வுகளில் சில மாற்றம் ஏற்படுகிறது. பொதுவாகவே கால புருஷனுக்கு எட்டாம் வீட்டை எந்த கிரகம் கடந்தாலும் அது போகிர போக்கில் சில கெடுதல்களை செய்துவிட்டுதான் போகிறது. அந்த விதத்தில் சந்திரன் மனோகாரகன் மற்றும் பயண காரகன் என்பதால் மனதிலும் பிரயாணத்திலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில்தான் சந்திரன் எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டது.பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன.சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை. வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். இன்றைய தினம் சந்திரன் விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். மேஷ ராசிக்கு எட்டாவது விருச்சிகம். எனவே இன்றைய தினம் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. சந்திரன் சஞ்சரிக்கும் ராசிக்காரர்களும், சந்திராஷ்டம ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சந்திராஷ்டம நாளில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது நல்லது. அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். அதே போல வெண்மை நிற பொருட்கள் பாதிப்படைவது. அடுப்பில் வைத்த பால் பொங்குவது. உணவு வீணாவது என இயற்கையாக நடப்பது சந்திராஷ்டம தோஷத்தை போக்கிவிடும். சந்திராஷ்டம நாட்களில் மேஷம் விருச்சிக ராசியினர் சந்திராஷ்டம நாளில் முருகப்பெருமானை வழிபடலாம். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் மகாலட்சுமியை வழிபடலாம். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் பெருமாளை வழிபடலாம். கடக ராசிக்காரர்கள் அம்மனை வழிபடலாம். சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானையும் சூரியனையும் வழிபடலாம். தனுசு மீனம் ராசிக்காரர்கள் சந்திராஷ்டம நாளில் பைரவரை வழிபடலாம். மகரம், கும்ப ராசிக்காரர்கள் சந்திராஷ்டம நாளில் ஆஞ்சநேயரை வழிபடலாம்.

இருமனம் கலக்காது, திருமணம் சிறக்காது

கல்யாண பொருத்தங்கள் குறித்து பலவிதமான விஷயங்கள் இருக்கின்றன. நாள் பொருத்தம், நட்சத்திர பொருத்தம், பெயர் பொருத்தம் என பல ஜோதிட விதிகளைச்  சொல்லுவார்கள். ஆனால், எத்தனைப்  பொருத்தம் இருந்த போதிலும், ஒரே ஒரு பொருத்தம் மட்டும் இல்லை என்று சொன்னால், மணப் பொருத்தம் இல்லை என்றுதான் பொருள். இருமனம் கலக்காது திருமணம் சிறக்காது.இந்த உறவை அற்புதமாகப் பாடுவார் கவிஅரசர் கண்ணதாசன்.

“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” இரு உடல் கலப்பதால் மட்டும்பயனில்லை. அது காமம். அது வாழ்வின் ஒரு பகுதி தானே தவிர, அது முழுமை அல்ல. அந்த காமத்தையும் முறைப் படுத்தவே கல்யாண உறவு. இதில் மனப்பொருத்தம் அவசியம்.

பெண்களின் சபரிமலை!

கேரள மாநிலம் பத்தினம் திட்டம் மாவட்டத்தில் இருக்கிறது பெருநாடு என்ற பகுதி. இந்த இடத்தில் அமைந்திருக்கும் காக்காட்டு கோயில் தர்மசாஸ்தா கோவில் பெண்களின் சபரிமலை என்று பெருமையாக சொல்லப்படுகிறது. பெருநாடு சாஸ்தா கோவில் பந்தனம் திட்டம் மாவட்டத்தில் பந்தளம் திட்டாவிலிருந்து சபரிமலை செல்லும் வழியில் உள்ளது. இக்கோவில் பந்தள மகாராஜா ராஜசேகர் மன்னரால் கட்டப்பட்டது. சபரிமலையில் மணிகண்டனுக்கு மன்னர் கோவில் கட்ட பெருநாட்டில் இருந்துதான் பணிகளை மேற்கொண்டதாக கூறுகின்றனர்.

பெருநாடு சாஸ்தா கோவிலில் இருந்து சபரிமலை கோவில் கட்டிடங்களுக்குத் தேவையான பொருட்கள், பணியாளர்களை அனுப்புதல் போன்ற அனைத்து பணிகளையும் மன்னர் மேற்பார்வை செய்துள்ளார். பெருநாடு சாஸ்தாவும், சபரிமலை ஐயப்பனும் ஒன்றே என இங்குள்ளவர்கள்  கூறுகின்றனர். சபரிமலைக்கு பெண்கள் பத்து வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் செல்ல முடியாது. இந்த வயதுள்ள பெண்கள் பெருநாடு சாஸ்தாவின் தரிசனம் செய்தால் சபரிமலை ஐயனை தரிசித்ததாகவே நினைக்கின்றனர்.  சபரிமலை ஐயப்பனுக்கு எண்ணில் அடங்கா விலை மதிப்பிட முடியாத நகைகளை சபரிமலைக்கு கொண்டு சென்று மகனுக்கு அணிவித்து மன்னன் அழகுபார்த்தான். இந்தக் காட்சியை பெண்களால் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தது. இதனால் சபரிமலையில் மகரஜோதி உற்சவம் முடிந்து வரும் வழியில் இந்த ஆபரணங்கள் பெருநாடு வழியாகவே நடை பயணமாகவே பந்தளத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படுகிறது. சபரிமலை சாஸ்தாவிற்கு அணிவிப்பதற்காக ஆரணமுளா  பார்த்தசாரதி கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தால் ஆடை மற்றும் திருவாபரணங்கள் மூன்றாம் நாளில் பெருநாடு சாஸ்தா கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதன் பின்னர் சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டு மண்டல பூஜை நிறைவு நாளில் தங்கத்தாலான ஆடை மற்றும் திருவாபரணங்கள்  சபரிமலையில் இருக்கும் சாஸ்தா விற்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

அதன் பின்னர் மகரஜோதி நிறைவுக்கு பின்னர் அந்த தங்கத்தால் ஆன ஆடை மற்றும் திருவாபரணங்கள் பெருநாடு கொண்டுவரப்பட்டு, அங்கிருக்கும் சாஸ்தாவிற்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன இவ்விழாவில் மரபுரிமையர் மற்றும் பெண்கள் பலரும் பங்கேற்று சாஸ்தாவை வழிபட்டு செல்கின்றனர் . இக்கோவிலை பெண்களின் சபரிமலைஎன்று பெருமையாக சொல்கின்றனர். அமைவிடம் கேரள மாநிலம் பந்தனம் திட்டம் மாவட்டம் ராணி வட்டத்தில் அமைந்திருக்கும் பெருங்காடு சாஸ்தா கோவில் பந்தனம் திட்டாவிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும் ராணியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

கல்யாணத்தின் நோக்கம் ஒன்றுதான்

ஆன்மா ஒரேவிதமானது. ஆண், பெண் பேதமில்லை. ஆனால், அது எடுக்கும் உடல்கள் பெரும்பாலும் இரட்டை விதமானது.
உலக இயக்கம் தொடர இறைவன் செய்த, எண்ணி எண்ணி வியக்க வைக்கும், அற்புத அமைப்பு இது. ஆண் இன்றி பெண்ணில்லை. பெண்ணின்றி ஆண் இல்லை. 
இந்த இரண்டு உயிர்களின் உன்னத உறவே கல்யாணம் எனும் பந்தம். கல்யாண   முறைகளிலும் சடங்குகளிலும் மாறுபாடு இருந்தாலும் நோக்கம் ஒன்று தான். அன்பு, பிணைப்பு, விட்டுக் கொடுத்து வாழ்வது, சமூகப் பங்களிப்பு, மகிழ்ச்சி தருதலும் பெறுதலும் என்று இந்த நோக்கம் விரிந்துகொண்டே போகிறது.

கல்யணம் ஏன்?

  1. கல்யணம் ஏன்?

உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் தனித்துவமானது. இவ்வுலகில் உயிர் தனித்து இயங்காது. அது இயங்க ஒரு உடல் வேண்டும். அப்படி உடல் பெற்ற உயிர் தான், அடுத்து ஒரு உயிரை உண்டாக்க முடியும்.
உடலைப் பெற்று விட்டபின் , உடலுக்கு உரிய பல தேவைகளைப்  பெற வேண்டும். பல செயல்களைச்  செய்ய வேண்டும். அதற்கு இன்னொரு உயிரும் உடலும் தேவை. இந்த இரண்டு உயிர்களும், ஒன்றையொன்று சார்ந்து, தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்கும் அறவாழ்வு வாழ வேண்டும்.

கல்யாணத்தில் தாலி கட்டும்பொழுது ஒரு மந்திரம் வரும்.

மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுநா

கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ் சதம்”

அந்த மந்திரத்தின் பொருள் இதுதான்.
“மங்களம் நிறைந்தவளே! உன்னோடு இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன். என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ,
சுபபோகங்களுடன் நூறாண்டு வாழ்வாயாக!” என்பது இதன் பொருள். இந்த மந்திரத்தை கவனித்து அர்த்தம் புரிந்து கொண்டாலே கணவன் மனைவி உறவின் சிறப்பும் பொறுப்பும் உன்னதமும் புரியும்.

தெய்வ நிலைக்கு உயர்த்தும் கல்யாண சடங்குகள்

தெய்வ நிலைக்கு உயர்த்தும் கல்யாண சடங்குகள்

முத்தான முப்பது சடங்குகள் பாகம் 1

ஒவ்வொரு மனிதனும், ஆணோ பெண்ணோ, இந்நிலவுலகில் பிறந்து, படிப்படியாக வளர்ந்து, தனக்குரிய அறத்தைக் கடைபிடித்து வாழ்ந்து, தன் புகழையும் சந்ததிகளையும் விட்டுச் செல்கிறான்.
அவன் வாழ்வு ஒவ்வொரு நிலையிலும் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவனும், அவன் சார்ந்த சமூகமும், அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ முடியும். அறம் தவறும் போது அத்தனையும் தவறும். இந்த அற வாழ்க்கை வாழத்  துணை புரிவது கல்யாணம். கல்யாணத்தின் நோக்கம், மற்றும் செய்யும் முறைகள் பற்றிய சுவையான விளக்கங்களை “முத்தான முப்பது சடங்குகள்” என்று தொகுத்து வழங்குகின்றோம்.

  1. வாழ்வின் படி நிலைகள்

திரு என்பது தெய்வத்தன்மை எனவும், மணம் என்பது இணைதல் எனவும் பொருட்பட்டு, மேன்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனக் கூறலாம். கல்யாணத்தின் முக்கியமான நோக்கம் அற வாழ்க்கை வாழ்தலே.  அதனால் தான் வள்ளுவர் போன்ற சான்றோர்கள் ‘‘இல்லறம்” என்று வகுத்தார்கள்.

@ மனிதன் தனித்து வாழ்ந்து, கல்வி கற்று, அறிவு பெரும் நிலை “பிரம்மச்சரியம்” என்பது.

@ அக் கல்வியில் கண்ட அறத்தோடு வாழ, தனக்குரிய துணையோடு இணைதலை  “இல்லறம்” என்று சொன்னார்கள்.

@.சந்ததிகளை உருவாக்கி, அடுத்த தலைமுறையை, அறநெறி வாழ்வுக்குத் தகுதியானவர்களாக மாற்றி, வாழ்ந்து படிப்படியாக இல்லற பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைத்து தன்னை விடுவித்துக் கொள்வதை “வானப் பிரஸ்தம்” என்றார்கள்.

@.முற்றிலுமாக விலகி, தன்னுடைய ஆன்ம கடைத்தேற்றம் நோக்கி நகர்தலை “சன்னியாசம்” என்றும் பிரித்து வைத்தனர்.

இந்த நான்கு படி நிலைகளில் ஒவ்வொன்றுக்கும், அதற்குரிய அறநெறிகள் உண்டு.

மாதம் ரூ.1000 முதலீடு; ₹.5 லட்சம் ரிட்டன்: போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டம் தெரியுமா?

மாதம் ரூ.1000 முதலீடு; ₹.5 லட்சம் ரிட்டன்: போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டம் தெரியுமா?

மாதம் தோறும் ரூ.1,000 முதலீடு செய்து, திட்டத்தின் முதிர்வு காலத்தில் ₹.5,16,479 வரை ரிட்டன் பெறும் ஆபீஸின் அசத்தல் திட்டம் குறித்து இங்கே பார்க்கலாம். 5,10,15, 20 ஆண்டுகள் என முதிர்வு கால பலன்கள் இங்கே உள்ளன.

இத்திட்டத்தில் மாதந்தோறும் நீங்கள் ரூ.1000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் உங்கள் பணம் ரூ.71806 ஆக வளரும். வட்டியாக மட்டும் ரூ.11806 கிடைக்கும்.

public-provident-fund | போஸ்ட் ஆபீஸ் பி.எப் திட்டம்  இந்தியர்களுக்காக பிரத்தியேகமாக  உருவாக்கப்பட்டது ஆகும். இந்தத் திட்டம்,  முதிர்வு காலத்தில் பணத்தைக் குவிக்க உதவுகிறது.

மேலும், பொது வருங்கால வைப்பு தொகை (PPF) என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் அஞ்சல் அலுவலகத் திட்டமாகும், இது 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

இது வரி விலக்கு, உத்தரவாத வருமானம், உறுதி செய்யப்பட்ட வருமானத்தை வழங்குகிறது. இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

PPF பகுதியளவு திரும்பப் பெறும் வசதியும் கொண்டுள்ளது. நீண்ட கால முதலீட்டை எதிர்பார்க்கும் நபர்கள் நல்ல வருமானத்தைப் பெற அதைத் தேர்வுசெய்யலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

பிபிஎஃப்-ன் சிறப்பு, வட்டி மற்றும் புகழ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த திட்டம் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

PPF இல் முதலீடு செய்வதன் நன்மைகளை வங்கிகள் அல்லது தபால் நிலையங்களே விளக்குகின்றன. ஆனாலும், ஒரு சராசரி முதலீட்டாளர் பெரும்பாலும் அறியாத பல விஷயங்கள் இத்திட்டத்தில் உள்ளது.

மேலும், உங்கள் முதலீட்டை 15 ஆண்டுகளுக்கு மேல் நீட்டித்தால், உங்கள் பணம் வேகமாக அதிகரிக்கும்.

ரூ.1000 முதலீடு செய்தால்..
இத்திட்டத்தில் மாதந்தோறும் நீங்கள் ரூ.1000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் உங்கள் பணம் ரூ.71806 ஆக வளரும். வட்டியாக மட்டும் ரூ.11806 கிடைக்கும்.

இதே தொகை 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 990 ஆக இருக்கும். வட்டி ரூ.52,990 ஆக இருக்கும்.

15 ஆண்டுகள் என்று கணக்கீட்டால் ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 568 கிடைக்கும். வட்டி மட்டும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 568 ஆக இருக்கும்.

20 ஆண்டுகள் என்று வரும்போது ரூ.5 லட்சத்து 16 ஆயிரத்து 479 கிடைக்கும். வட்டியாக மட்டும் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 479 கிடைத்திருக்கும்.

Always4u
× How can I help you?