ருத்ராட்சை.. அணிந்துஇதை மட்டும் செய்யாதீங்க..

ருத்ராட்சை..

கழுத்தில் அணிந்து
கொண்டு
இதை மட்டும் செய்யாதீங்க..

ருத்ராட்சம் செய்யும் அற்புதம்..

பாருங்க

நம் முன்னோர்கள் எதை செய்தாலும்,

அறிவியல் காரணங்களையும் ஆராய்ந்தே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்..

ருத்ராட்சை மாலை அணிவதிலும்,

ஆன்மீக காரணமும் உண்டு,

அறிவியல் காரணமும் உண்டு.

ருத்ராட்சையை பொறுத்தவரை,

இயற்கையான ஆண்டிபயாடிக் தன்மை வாய்ந்தது.

இதனால், நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பதுடன்,

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது..

ருத்ராட்சை:

அத்துடன், இயற்கையாகவே நேர்மறை ஆற்றலை ஈர்க்க கூடிய சக்தியையும் பெற்றிருக்கிறது..

எனவே, நம்முடைய உடலுடன் இந்த ருத்ராட்சை ஒட்டியிருக்கும்போது,

நேர்மறை எண்ணங்கள் நம்மிடம் அதிகமாக ஈர்க்கப்படும்..

இதன்காரணமாக, மனதில் ஒருவித தெளிவும்,

நிம்மதி உணர்வும்,

ஆத்ம திருப்தியும் கிடைக்கின்றது…

அதைவிட முக்கியமாக,

பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற அபாய நோய்களின் வீர்யத்தை இந்த ருத்ராட்சைகள் குறைக்கின்றன..

அவ்வளவு ஏன்? நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் இந்த ருத்ராட்சை ஆற்றிவிடும்.

காரணம், இந்த ருட்ராட்சையை சுற்றி, வெப்பத்தை கிரகித்துக்கொண்டு சுற்றுப்புறத்தினை குளிர்விக்கும் தன்மை உள்ளது…

அதனால்தான், இதை அணியும்போது, உடல் குளிர்ச்சி பெறுகிறது.

எனவே, இந்த ருத்ராட்சையை, ஒரு மதம் மட்டுமேயல்லாமல், அனைத்து மதத்தினருமே அணியலாம்..

வயது வித்தியாசமின்றி அணியலாம்.

ஆன்மீக ரீதியாக பார்த்தோமேயானால், மிகவும் புனிதம் நிறைந்த, மங்களகரமான பொருளாக ருத்ராட்சை பார்க்கப்படுகிறது..

21 வகைகள் ருத்ராட்சங்கள் உள்ளதாம்.

சிவபெருமானின் கண்ணீரில் இருந்து ருத்ராட்சம் உருவானதாக சொல்வார்கள்..

எனவேதான், சிவபக்தர்கள் இந்த ருத்ராட்சையை அணிந்து கொள்வார்கள்..

இதனால் மனம் அமைதி பெறுவதுடன், முன்னேற்றம், செல்வம், மகிழ்வான வாழ்க்கை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

எனினும், ருத்ராட்சை அணியும்போது சில விஷயங்களை மறக்காமல் கடைப்பிடிக்க வேண்டும்.

குறிப்பாக, திதி, பெண்கள் தீட்டு, தாம்பத்யம் என்ற 3 விஷயங்களும் இயற்கையாக நடைபெறக்கூடிய நிகழ்வு என்பதால், இதுபோன்ற நேரங்களில் ருட்ராட்சை அணியலாம்..

சிவப்பு, மஞ்சள், வெள்ளை நூலில் அணியலாம்..

அல்லது வெள்ளி, தங்கம், தாமிரத்தில்கூட அணியலாம்.

ஆனால், கருப்பு நூலில் மட்டும் இதை கோர்த்து அணிய கூடாதாம்.

யாராவது ஒருவர் இறந்த இடத்திற்கோ அல்லது தகனம் செய்யும்போதோ ருத்ராட்சத்தைஅணியக்கூடாது…

அதேபோல, படுக்கையறையிலும் ருத்ராட்சம் அணியக்கூடாது.

ஒவ்வொரு இரவும் தூங்கும் முன்பும், ருத்ராட்சை மாலையை கழற்றி தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு படுப்பது நல்லது.

இதனால் மனம் அமைதி பெறுவதுடன், நல்ல தூக்கமும் வரும்.

பிறந்த குழந்தையை பார்க்க செல்லும் போது ருத்ராட்சம் அணியக்கூடாது.

இதனால் வாழ்க்கையில் தொல்லை ஏற்படலாம் என்கிறார்கள்..

அதேபோல, ருத்ராட்சம் அணியும்போது மது அருந்தக்கூடாது, சிகரெட் பிடிக்கக்கூடாது, இறைச்சி சாப்பிடக்கூடாது.

முக்கியமாக, இறைச்சி, ஆல்கஹால் சாப்பிடும் இடத்திலும் ருத்ராட்சை அணியக்கூடாது..

இதை மீறினால் ருத்ராட்சமும் தூய்மையற்றதாகிவிடுமாம்..

அத்துடன், வரக்கூடிய நன்மைகளும் உங்களை வந்து சேராது..

அசைவம் சாப்பிட நேர்ந்தாலும், அந்த நாட்களில் ருத்ராட்சையை கழட்டிவிட வேண்டுமாம்.

இறுதி ஊர்வலம் செல்லும்போதும் ருத்ராட்சம் அணியக்கூடாது.

மொத்தத்தில், மனதை அடக்கி, மனக்கட்டுப்பாட்டை வளர்க்கும் ஆற்றல் நிறையவே உள்ளது..

ருத்ராட்சம் அணிபவர்களுக்கு ஞாபகசக்தியும் அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன்கள் அறிமுக மேடை 47

பெயர் :என்.கே .பரமேஷ்வரன் மேட்ரி ஐடி : (எம்எஸ்25260) பிறந்த இடம்:சென்னை பிறந்த தேதி :10-செப்டம்பர்-1980 திருமண நிலை : திருமணமாகாதவர் வயது : 43 கல்வி:உயர்நிலைப் பள்ளி 12வது தொழில்: சொந்த தொழில் தொழில் விவரம்: JCP வணிகம் ஆண்டு வருமானம் :1200000 ரூபாய் மதம்:இந்து சாதி/பிரிவு : கொங்கு வெள்ளாள கவுண்டர், மொழி:தமிழ் நட்சத்திரம் : உத்திரம் உயரம் :5 அடி  (167 செ.மீ.) எடை : 80 கிலோ உடல் அமைப்பு : சராசரி சுயவிவர விளக்கம்:நல்ல குடும்பப் பின்னணியுடன் நல்ல குணம் கொண்டவர் குடும்ப மதிப்புகள்:பாரம்பரியமானது குடும்ப நிலை:பணக்கார நிலை தந்தையின் பெயர் : KUZHANDHAI SAMY N தாய் பெயர் : கே சின்னம்மாள் சகோதரிகளின் எண்ணிக்கை : மூத்தவர்-1 கூட்டாளர் விருப்பம் வயது : 30. 40 க்கு இடையில் திருமணமாகாதவர்

ரூ.1 லட்சம் என்பது 5 ஆண்டுகளில் ரூ.4 கோடியாகிறது

CROREPATI பங்கு, 40000%  சதவிகிதம் அதாவது ரூ 1 முதல் ரூ 385 வரை! ரூ.1 லட்சம் என்பது 5 ஆண்டுகளில் ரூ.4 கோடியாகிறதுHazoor Multi Projects ஹஸூர் மல்டி ப்ராஜெக்ட்ஸ் ஒரு மைக்ரோகேப் பங்கு. இதுHazoor Multi Projects ஹஸூர் மல்டி ப்ராஜெக்ட்ஸ் , BSE-பட்டியலிடப்பட்ட மைக்ரோகேப் பங்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தலால் ஸ்ட்ரீட்டில் நடந்த மாரத்தான் ஓட்டத்தை விட குறைவாக எதையும் காணவில்லை. பிஎஸ்இ தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் ரியாலிட்டி பங்கு 400 சதங்கள் அடித்துள்ளது. பகுப்பாய்வுகளின்படி, ஹஸூர் மல்டி ப்ராஜெக்ட்ஸ் பங்குகள் வெறும் 5 ஆண்டுகளில் 40000 சதவிகிதம் அபரிமிதமான வருவாயை வழங்கியுள்ளன, இதன் விளைவாக முதலீட்டாளர்களுக்கு செல்வம் பெருகும். ஒருவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஹஸூர் மல்டி ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் ஈக்விட்டி ஷேர்களில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்து அப்படியே வைத்திருந்தால், அவருடைய முதலீட்டின் மொத்த மதிப்பு ரூ.4 கோடியைத் தாண்டியிருக்கும். பரிவர்த்தனை தரவுகளின்படி, 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொன்றும் 0.95 பைசாவுக்கு மேற்கோள் காட்டப்பட்ட ஹஸூர் மல்டி ப்ராஜெக்ட்ஸ் பங்குகள் திங்கள்கிழமை 09 . 04 .2024 முடிவின்படி, இப்போது ரூபாய் .385.80க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில், அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவை பரிசீலிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி அதன் வாரியம் கூடும் என்று நிறுவனம் பரிமாற்றத் தாக்கல் மூலம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் வளர்ந்து வரும் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிதி திரட்டும் திட்டத்தையும் வாரியம் எடுக்கும். நிறுவனத்தின் வளர்ந்து வரும் வணிகத் தேவைகளுக்காக, ஈக்விட்டி பங்குகள், வாரண்டுகள், பிற பத்திரங்கள், முன்னுரிமைச் சிக்கல், தனியார் வேலை வாய்ப்பு, தகுதிவாய்ந்த நிறுவன வேலை வாய்ப்பு, உரிமைகள் வெளியீடு அல்லது பிற அனுமதிக்கப்பட்ட முறைகள் மூலம் மாற்றத்தக்க கருவிகளை வழங்குவதன் மூலம் மேலும் நிதி திரட்டுவதற்கான முன்மொழிவு. வாரியம் அல்லது அதன் கலவையால் முடிவு செய்யப்பட்டு, மேலே குறிப்பிட்டுள்ள நிதி திரட்டலுக்கான துணை நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், அத்தகைய சட்டரீதியான/ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, ” நிறுவனம் ஒரு ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் கூறியது.

Hazoor Multi Projects உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. ரூபாய் .756 கோடி சந்தை மூலதனத்தைக் கொண்ட இந்நிறுவனம், மூன்றாம் காலாண்டில் (Q3FY24) நிகர லாபம் ரூபாய்.10.29 கோடியாக இருந்தது. துறப்பு: மேலே (உள்ள கட்டுரை )சொன்ன கருத்துக்கள்,  தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது, மேலும் இது எந்த முதலீட்டு ஆலோசனையாகவும் கருதப்படக்கூடாது. BM MONEY அதன் வாசகர்கள்/பார்வையாளர்களிடம் பணம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன் அவர்களின் நிதி ஆலோசகர்களை அணுகுமாறு அறிவுறுத்துகிறது.

2024 – புத்தாண்டு பலன்கள் – மீனம்

மீனம் ராசி அன்பர்களே..!!2024 – புத்தாண்டு பலன்கள் – மீனம்எதிலும் அகப்படாமல் சிந்தித்து செயலாற்றும் மீன ராசி அன்பர்களே..! மனதளவில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த மானியம் கிடைக்கும். விவசாயத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் மனதிற்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்வீர்கள். இளைய சகோதரர்கள் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். கலாச்சாரம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். ஆசைகளைக் குறைத்துக் கொள்வது பல சிக்கல்களைத் தவிர்க்க உதவும். வாழ்க்கைத் துணைவரின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவது குழப்பங்களைத் தவிர்க்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாகக் குறையும். நரம்பு சார்ந்த பிரச்சனைகள் விலகும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். அவ்வப்போது வயிற்றில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.

பெண்களுக்கு மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். தனம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் விலகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான தேடல் அதிகரிக்கும். புதிய விஷயங்களில் ஆர்வத்தோடு கலந்து கொள்வீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகப் பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். சிறு சிறு முயற்சிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வத்தோடு கலந்து கொள்வீர்கள். சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய கருத்துகளில் விவேகம் வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். அரசு வகையில் சில உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். கால்நடை வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது நல்லது. வர்த்தக விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய வியாபாரம் குறித்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் சஞ்சலம் இன்றி செயல்படவும். ஓவியத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், ஆதரவான சூழலும் உண்டாகும். அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். விளம்பரம் தொடர்பான துறைகளில் அனுகூலம் ஏற்படும். அரசியல்வாதிகள் மனசாட்சி படி செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிந்தனைகளை செயல்படுத்தும் போது அலட்சியம் இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்களால் மாற்றமான அனுபவம் ஏற்படும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதற்கான சூழல் அமையும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வழிபாடுகள் : புதன்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பெருமாளை வழிபாடு செய்துவர சுப காரியங்கள் கைகூடிவரும். குறிப்பு : இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும்.

2024 – புத்தாண்டு பலன்கள் – கும்பம்

கும்பம் ராசி அன்பர்களே..!!2024 – புத்தாண்டு பலன்கள் – கும்பம்அமைதியாக இருந்து வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே..! நினைத்த காரியத்தை நிறைவேற்ற வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவீர்கள். இலக்கியம், நாவல் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணங்களில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பம் உண்டாகும். பிரம்மாண்டமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். கால்நடை வளர்ப்பு தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்கால வாழ்க்கை பற்றிய சிந்தனைகள் மேம்படும். ஆடம்பரமான புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சகோதரர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் தன்மை அறிந்து செயல்படவும். அலங்காரப் பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் அலைச்சலுக்குப் பின்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனையில் தெளிவு ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொழுப்பு சார்ந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். பெண்களுக்கு செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். எதிலும் அலட்சியப் போக்கின்றி செயல்படவும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் தொழில் சார்ந்த வாய்ப்புகள் சாதகமாகும். தம்பதிகளுக்குள் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். காப்பீடு விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும்.

மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்தோடு கலந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும் பயணங்களின் மூலம் புதிய ஆதாயம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உத்தியோகப் பணிகளில் நல்ல மதிப்பு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பயணங்களின் மூலம் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். விதண்டாவாத பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். தினந்தோறும் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தவும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். பயணம் சார்ந்த வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். எதிர் பாலின மக்கள் வழியில் அனுகூலம் பிறக்கும். இடமாற்றம் குறித்த சிந்தனைகள் மனதில் தோன்றி மறையும். கிளைகளை விரிவுபடுத்துவதற்கான சூழல் மற்றும் உதவிகள் கிடைக்கும். உழைப்பையும், முயற்சியையும் அதிகப்படுத்துவதன் மூலம் புதிய இலக்குகளை அடைவீர்கள். கலைஞர்கள் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். சில ஒப்பந்தங்களில் தீர விசாரித்து முடிவெடுப்பது நல்லது. வருவாய் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். ரசனை தன்மைகளை அறிந்து சில வியூகங்களை அமைப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடல் உழைப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் பொருட்கள் மீது ஆர்வம் கொள்ளாமல் இருக்கவும். வழக்கு விஷயங்களில் பொறுமையைக் கையாள்வது உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். சஞ்சலமான சிந்தனைகளால் புதிய அனுபவம் ஏற்படும். வழிபாடுகள் : திங்கட்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அம்பாளை வழிபாடு செய்துவர செயல்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குறிப்பு : இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும்.

2024 – புத்தாண்டு பலன்கள் – மகரம்

மகரம் ராசி அன்பர்களே..!!2024 – புத்தாண்டு பலன்கள் – மகரம்விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடும் மகர ராசி அன்பர்களே..! முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் பிறக்கும். உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சோம்பலால் சில செயல்களில் தாமதம் ஏற்படும். மறதி சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறையும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை உண்டாகும். சுகபோக விஷயங்களில் நாட்டம் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான புதிய சிந்தனைகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறு சிறு இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். தியானம் மற்றும் சிறு அளவிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும். வாகன பழுதுகளை அவ்வப்போது சரி செய்து கொள்ளவும். பெண்களுக்கு சகோதரர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அலைச்சலுக்கு பின்பு கைகூடும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நுட்பமான பணிகளைத் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். செல்வச்சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரப் பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் புதிய அனுபவம் ஏற்படும். உயர்கல்வியில் சிறு சிறு குழப்பம் தோன்றி மறையும். கணிதம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நபர்களின் தன்மை அறிந்து நட்பு கொள்ளவும். மறதி தொடர்பான சிக்கல் தோன்றி மறையும். ஆராய்ச்சி பணி சார்ந்த வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொறுப்புகளின் மூலம் மதிப்பு மேம்படும். சக பணியாளர்களிடம் பொறுமையைக் கையாளவும். மற்றவர்களை பற்றிய கருத்துகளில் கவனம் வேண்டும். அறிமுக நபர்களிடம் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.

வெளியூர் பணி வாய்ப்புகளில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரப் பணிகளில் உழைப்புக்கு ஏற்ப லாபமும், முன்னேற்றமும் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் ஆலோசனை வேண்டும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். கூட்டாளிகளிடம் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. அரசு தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கேற்ப செயல்படவும். கலை சார்ந்த துறையில் புதுவிதமான மாற்றங்களை செய்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு வழியில் சில உதவிகள் கிடைக்கும். காரசாரமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். ஆடம்பரமான சிந்தனைகளைக் குறைத்துக் கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும். அரசியல்வாதிகள் சாதுரியமான பேச்சுக்களின் மூலம் புதிய மாற்றங்களை உருவாக்குவீர்கள். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைக்கு ஏற்ப செல்வாக்கும், பாராட்டுகளும் அதிகரிக்கும். எதிராக இருப்பவர்களை அறிந்து கொள்வீர்கள். வழக்கு பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வழிபாடுகள் : வெள்ளிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்துவர செய்யும் முயற்சிகளில் உள்ள தடைகள் நீங்கும். குறிப்பு : இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும்.

2024 – புத்தாண்டு பலன்கள் – தனுசு

தனுசு ராசி அன்பர்களே..!!2024 – புத்தாண்டு பலன்கள் – தனுசுஎல்லோரிடமும் அன்பாக இருக்கும் தனுசு ராசி அன்பர்களே..! குடும்பத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். எதிலும் துரிதமாகச் செயல்படுவீர்கள். குழந்தைகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றத்தைச் செய்வீர்கள். தேவையில்லாமல் அடுத்தவர் காரியங்களில் தலையிடாதீர்கள். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் நினைத்திருந்த ஒரு சில ஆசைகள் நிறைவேறும். பயனற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. ஏற்றுமதி துறையில் புதுமையான அனுபவம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆடம்பரமான சிந்தனைகளால் சேமிப்பு குறையும். நடைமுறைக்குத் தகுந்த விதத்தில் வாகனங்களை மாற்றி அமைப்பீர்கள். நரம்பு சார்ந்த இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். விசா தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவது புரிதலை மேம்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உணர்ச்சிவசமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். அவ்வப்போது ஒற்றைத் தலைவலி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் சிக்கனமாகச் செயல்படுவது பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். பெண்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனப் பயணங்களில் ஆர்வம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மறைமுகமான சில விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பமும், தயக்கமும் படிப்படியாகக் குறையும். புதிய ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டுத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

உத்தியோகப் பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. இடமாற்றம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். அலுவலகம் சார்ந்த ரகசியங்களில் விவேகத்துடன் செயல்படவும். சக ஊழியர்களால் பொருளாதாரம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் தகுந்த ஆலோசனை பெற்று புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும். எதிர்பாராத சில தடைகளால் தாமதமும், அலைச்சலும் ஏற்படும். நடைமுறை வியூகங்களை அறிந்து செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். தொழில் நிமிர்த்தமான சில தந்திரங்களைப் புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் புதுவிதமான அனுபவங்களைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த சில வரவுகள் தாமதமாக கிடைக்கும். அளவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வெளிவட்டாரத்தில் திறமைக்கு உண்டான மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். கடைசி நிமிடத்தில் நினைத்த பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். வீடு, மனை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். அரசியல்வாதிகள் கட்சி சார்ந்த பணிகளில் விவேகத்தோடு செயல்படவும். உடனிருப்பவர்களிடம் முன் கோபமின்றி செயல்படுதல் நல்லது. பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் உடலில் ஒருவிதமான அசதி உண்டாகும். ஆதாரம் இல்லாத கருத்துகள் கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. வழிபாடுகள் : செவ்வாய்க்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபாடு செய்துவர சிந்தனைகளில் தெளிவும், மனதளவில் உத்வேகமும் பிறக்கும். குறிப்பு : இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும்.

2024 – புத்தாண்டு பலன்கள் – விருச்சிகம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!!2024 – புத்தாண்டு பலன்கள் – விருச்சிகம்சுறுசுறுப்பாகவும், துடிப்புடனும் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே..! மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இழுபறியான முயற்சிகள் கைகூடும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை களைவீர்கள். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். பாகப் பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பொழுதுபோக்கு செயல்களில் நெருக்கடியான சூழல் ஏற்படும். சூடு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தவறிய நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். கொழுப்பு சார்ந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. விவசாயப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். கட்டிட வடிவமைப்பு சார்ந்த தொழிலில் அனுகூலம் ஏற்படும். ஊடகத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஒருதலையான விஷயங்களில் மாற்றமான சூழல் அமையும். வித்தியாசமான செயல்களின் மீது ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் குறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். அடிவயிற்றுப் பகுதியில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். பழவகைகள் மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை உணவுகளில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பெண்களுக்கு ஆடம்பரமான சிந்தனைகள் மற்றும் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களில் அறிமுகத்தால் சில மாற்றமான தருணங்கள் அமையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் தேவைக்கேற்ப கிடைக்கும். குடும்ப விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது. காரசாரமான விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். மாணவர்கள் பேச்சுக்களில் கவனத்துடன் இருக்கவும். உயர்நிலைக் கல்வியில் அலைச்சலும் புரிதலின்மையும் நேரிடலாம். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கணிதத்துறை சார்ந்த மாணவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. கணிப்பொறியியல் சார்ந்த துறைகளில் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த சில சங்கடமான சூழல் மறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பணி நிமிர்த்தமான சில பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். அலுவல் பணியில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், அறிமுகமும் ஏற்படும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் குறையும். சந்தை நிலவரங்களை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் செயல்படுவீர்கள். லாபத்தை தனியே எடுத்து வைப்பது நல்லது. எதிலும் பேராசையின்றி அளவுடன் இருந்தால் மனநிம்மதி ஏற்படும். பொருட்களில் தரங்களை அறிந்து கொள்முதல் செய்யவும். புதிய முதலீடு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கலைத்துறையில் புதுவிதமான தேடல் ஏற்படும். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மறைமுகமான சில எதிர்ப்புகளால் போட்டியும் புதிய அனுபவமும் கிடைக்கும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உறவுகள் மூலம் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். அரசியல்வாதிகள் சூழ்நிலையறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற் போல வியூகங்களை அமைத்து செயல்படுவீர்கள். சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது தோன்றி மறையும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பொய்யான வாக்குறுதிகளை குறைத்துக் கொள்வது நல்லது. வழிபாடுகள் புதன்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பெருமாளை வழிபாடு செய்து வர தொழில் சார்ந்த தடைகள் விலகும். சேமிப்புகள் அதிகரிக்கும். குறிப்பு இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும்.

2024 – புத்தாண்டு பலன்கள் – துலாம்

துலாம் ராசி அன்பர்களே..!!2024 – புத்தாண்டு பலன்கள் – துலாம்எதிலும் துல்லியமாகச் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே..!மனதிற்கு நெருக்கமானவர்களால் புதிய அனுபவம் உண்டாகும். மனதைக் குழப்பிய சில விஷயங்களுக்குத் தெளிவு பிறக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய வியூகங்கள் கைகொடுக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். வருமான ஆதாரங்களை மேம்படுத்துவீர்கள். கனிவான பேச்சுக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பயிற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான சில வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். கற்பனைகளை விட காரியங்களில் ஈடுபடுவது மேன்மையை ஏற்படுத்தும். பொறுப்பான சில காரியங்களின் மூலம் மதிப்பு மேம்படும். இளைய சகோதரரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். கமிஷன் சார்ந்த வியாபாரம் கைகொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பது மற்றும் கைபேசி பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளவும். பற்கள் மற்றும் இடுப்பு வலி சார்ந்த பிரச்சனைகள் குறையும். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும். பெண்களுக்கு கனிவான பேச்சுக்கள் நல்ல மதிப்பை உருவாக்கிக் கொடுக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொன், பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பதற்கான உதவிகள் கிடைக்கும். புதுவிதமான கல்வி சார்ந்த துறைகளில் ஈர்ப்பு உண்டாகும். உத்தியோகப் பணிகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நவீன தொழில் நுட்பங்களால் ஆதாயம் அடைவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் நன்மதிப்பு ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் ஆதாயமான பலன்கள் உண்டாகும். பணி சார்ந்த புதிய மாற்றம் ஏற்படும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்பட்டாலும் அதற்கான உழைப்பும் அதிகமாக இருக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் விரயங்களுக்குப் பின்பு கிடைக்கும். அபிவிருத்திக்கான சூழல் சாதகமாக அமையும்.

கலைஞர்கள் கலைத்துறைகளில் சில நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சோர்வின்றி செயல்பட்டால் மதிப்பும், பரிசும் கிடைக்கும். எதிர்பார்த்த வரவுகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். விலகிச் சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் தோன்றி மறையும். மூத்த கலைஞர்களுடன் அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அலைபாயும் சிந்தனைகளால் சில குழப்பம் தோன்றி மறையும். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் பொறுப்புடன் செயல்பட்டால் முன்னேற்றமான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும், இருப்பினும் அதற்கான ஆதாரங்கள் பின்னாளில் கிடைக்கும். பேராசையின்றி சேவை மனப்பான்மையோடு செயல்பட்டால் நல்ல மதிப்பும், பலன்களும் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். வழிபாடுகள் செவ்வாய்க்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபாடு செய்து வர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். குறிப்பு இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும்.

2024 – புத்தாண்டு பலன்கள் – கன்னி

கன்னி ராசி அன்பர்களே..!!2024 – புத்தாண்டு பலன்கள் – கன்னிபுதுமையான சிந்தனைகள் உடைய கன்னி ராசி அன்பர்களே..!மனதில் தைரியம் உண்டாகும். பேச்சுக்களில் ஆளுமைத் திறன் மேம்படும். குறுகிய தூரப் பயணங்களால் விருப்பம் நிறைவேறும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எந்த ஒரு செயலிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நுண் கலைகளில் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். அரசு வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பணிபுரியும் இடத்தில் ஆதரவு கிடைக்கும். இணைய வர்த்தகத்தில் சிந்தித்துச் செயல்படவும். திறமைக்குண்டான உயர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வீடு கட்டுவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செங்கல் மற்றும் மணல் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வித்தியாசமான சிந்தனைகளும், அதற்கான முயற்சிகளும் அதிகரிக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பணி நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தூக்கமின்மை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடலளவில் இருந்துவந்த அசதிகள் மற்றும் சோர்வுகள் படிப்படியாகக் குறையும். முழங்கால் பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். காய்கறி மற்றும் கீரை சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. பெண்கள் முடிந்து போன சில விஷயங்களை எண்ணாமல் இருப்பது நல்லது. முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். விளையாட்டு விஷயங்களில் பொழுதுகளைக் கழிப்பீர்கள். உயர்கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் அலைச்சல்களுக்குப் பின்பே அனுகூலம் ஏற்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் ஆதாயமான சூழல் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப வருவாய் உயர்வு அமையும். உபரி வருமான முயற்சிகள் கைகூடிவரும். தற்பெருமைக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் வழியில் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயத்தை மேம்படுத்த முடியும். அபிவிருத்திக்கான செயல்களில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். இடமாற்ற சிந்தனைகள் மனதளவில் மேம்படும். வங்கிக் கடன்கள் சிறு தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். கலைத்துறையில் அனுகூலமான சூழல் ஏற்படும். வரவேண்டிய வரவுகள் காலதாமதமாக கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் நல்ல மதிப்பையும், நிபுணத்துவத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். சக கலைஞர்களிடம் அனுசரித்துச் செல்வது பகைமையைத் தவிர்க்கும். அரசியல்வாதிகள் குதர்க்கமான சிந்தனைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. வழக்கு விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான கண்ணோட்டமும், அனுபவமும் ஏற்படும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவதால் நல்ல மதிப்பும், நற்பலனும் கிடைக்கும். வழிபாடு பௌர்ணமிதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி குலதெய்வத்தை வழிபட நினைத்த காரியங்கள் கைகூடும். தடைபட்ட பணிகள் முடிவுபெறும். குறிப்பு : இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும்.

Always4u
× How can I help you?