மீனம் ராசி அன்பர்களே..!! 2025 சனிப்பெயர்ச்சி பலன்கள்

மீனம் ராசி அன்பர்களே..!! சனிப்பெயர்ச்சி பலன்கள் 29.03.2025 முதல் 23.02.2028 வரை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மீன ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து ராசி ஸ்தானமான ஜென்ம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக ரிஷப ராசியான முயற்சி ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான கர்ம ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதினால் உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தனிமை சார்ந்த சிந்தனைகள் மனதளவில் அதிகரிக்கும். ஒப்பந்த விஷயங்களில் பத்திரங்களை படித்து பின்பு கையெழுத்திடவும். விலங்குகள் குறித்த சில அச்சங்களும் தடுமாற்றங்களும் ஏற்படும். சங்கீத துறைகளில் இடைதரகர்களை நம்பி ஈடுபட வேண்டாம். உடற்பயிற்சி துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நன்மை தரும்.சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால்,நண்பர்கள் இடத்தில் விதண்டாவாத பேச்சுகளை தவிர்க்கவும். விரும்பிய செயல்களால் கையிருப்புகள் குறையும்.

புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நன்மையை தரும். அலங்கார விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சட்ட திட்டங்களை அறிந்து அதற்கு ஏற்ப செயல்படுவது தேவையற்ற விரயங்களை குறைக்கும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியான கர்ம ஸ்தானத்தை பார்ப்பதினால் வியாபார பணிகளில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்ப்பாலின மக்கள் விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். செயல்பாடுகளில் அனுபவங்கள் வெளிப்படும். யோக பயிற்சிகளில் தனிப்பட்ட கவனம் உண்டாகும். வெளிவட்டத்தில் ஏற்ற இறக்கமான சூழல்கள் உண்டாகும். தொண்டு நிறுவனங்கள் தேவையான ஆவணங்களை கொண்டிருப்பது பயனற்ற விரயத்தை தவிர்க்கும்.சனி ராசிக்கு ஜென்ம பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் ராசியில் சனி சஞ்சாரம் செய்வதால் ஜென்ம சனி ஆகும். மனதளவில் இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பமும் அச்சமும் உண்டாகும். உறவுகள் இடத்தில் சில புரிதல்கள் ஏற்படும். நண்பர்களாக இருந்தவர்களும் எதிராக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குறுகிய வழியில் செல்வத்தை மேம்படுத்துவதற்கான எண்ணங்களும், அதனால் சில விரயங்களும் உண்டாகும்.

தொழில் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு புதிய ஊர்களுக்கு செல்வீர்கள். சிந்தனைப் போக்கில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் புதிய அனுபவங்களும் அலைச்சலும் ஏற்படும். நடந்து முடிந்த நிகழ்வுகளை குறித்து சிந்திப்பதை குறைத்துக் கொள்ளவும். குடும்பம் மற்றும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்புகள் கூடும். தாய்மாமன் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். துணைவர் இடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பகிர்வது நன்மை தரும். குறுந்தொழில் விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதில் சிறு தாமதமும் அலைச்சலும் ஏற்படும்.மாணவர்களுக்கு அடிப்படை கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். பேச்சுக்களில் இருந்துவந்த தடுமாற்றங்கள் விலகும். மேல்நிலைக் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் இருந்துவந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி எதிர்பார்த்த முடிவுகள்  ற்றும் வெளிநாடு சென்று படிப்பது தொடர்பான எண்ணங்கள் சாதகமாக முடியும். நிர்வாகம் தொடர்பான கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த கெடுபிடியான சூழல்கள் நீங்கி சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பணி சார்ந்த நுணுக்கங்களை புரிந்து கொள்வதில் கவனம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். சக ஊழியர்கள் இடத்தில் சிறு சிறு விவாதங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வுக்கான சூழல்கள் உருவாகும். வரி சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் சில மாறுபட்ட அனுபவங்களும் புதிய பக்குவமும் பிறக்கும். சந்தை நிலவரங்கள் மூலம் புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விவசாயம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். இருப்பினும் இலாபத்திலும் வரவுகளிலும் தடுமாற்றம் ஏற்படாது. கால்நடைகள் மூலம் ஆதாயத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களையும், கருத்துக்களை கூறுவதையும் தவிர்ப்பது நன்மை தரும். ஆன்மீக வியாபார விஷயங்களில் இருப்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு கலைத்துறையில் இருப்பவர்கள் தங்களது திறமைகளை மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் வெளிப்படுத்தி புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.

இதுவரை தடைப்பட்டு வந்த தன வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் விலகும். எதிர்பாலின மக்கள் விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். வழக்கு விஷயங்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் நீங்கி எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், மாறுபட்ட அனுபவங்களும் கிடைக்கும். பேச்சுக்களில் நினைத்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமாக தடையாக இருந்தவர்களை அறிந்து வெற்றி கொள்வீர்கள். கட்சி உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். பழைய வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான சூழல்கள் சாதகமாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உருவாகும். நன்மைகள் மீன ராசி அன்பர்களே! இதுவரை தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் விலகும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகளும் சூழலும் உருவாகும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கவனம் மீன ராசி அன்பர்களே! புதிய துறை மற்றும் அறிமுகம் இல்லாத சில பணிகளை மேற்கொள்ளும் போது ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும்.

நண்பர்கள் இடத்தில் தனிப்பட்ட ரகசியங்கள் மற்றும் எண்ணங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். வியாபார விஷயங்களில் கணக்கு வழக்குகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வழிபாடு குச்சானூர் சுயம்பு சனீஸ்வரரை வழிபட்டு வர மனதளவில் தெளிவுகள் பிறக்கும். மேற்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்களே. அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க மீண்டும்  அடுத்த  பதிவில்  சந்திக்கும்  வரை உங்கள் துரைவேலு கிருஷ்ணசாமி நன்றி வணக்கம்

கும்பம் ராசி அன்பர்களே..!!சனிப்பெயர்ச்சி பலன்கள், 2025

கும்பம் ராசி அன்பர்களே..!!சனிப்பெயர்ச்சி பலன்கள்,29.03.2025 முதல் 23.02.2028 வரை,திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில், கும்ப ராசிக்குராசி ஸ்தானத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து, இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்தார்.சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக ரிஷப ராசியான சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியானஅஷ்டம ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான லாப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்,சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதினால் ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வித்தியாசமான சில கனவுகள் மூலம் மனதளவில் தடுமாற்றம் ஏற்படும். வாகனங்களை மனதிற்கு பிடித்த விதத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். கொழுப்பு சார்ந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.பழமையான சில விஷயங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். சித்த வைத்தியம் சார்ந்த துறைகளில் தகுந்த ஆவணங்களை கையாள வேண்டும். விலை உயர்ந்த பொருட்களில் சற்று கவனம் வேண்டும்.சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதினால் வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். இயந்திர துறைகளில் இருப்பவர்களுக்கு சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறைவதற்கான சூழல் உருவாகும். வாசனை திரவியங்கள் மீது கவனம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வித்தியாசமான கதைகள் மற்றும் தொடர்கள் மீது ஆர்வம் ஏற்படும்.மற்றவர்களை நம்பி செயல்படுவதை குறைத்துக் கொள்வது நன்மை தரும்.சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியானலாப ஸ்தானத்தை பார்ப்பதினால் செய்யும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றிகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். மற்றவர்கள் மூலம் ஆதாயமான சூழல் அமையும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

நீண்ட தூர பயணங்கள் குறித்த எண்ணங்கள் சாதகமாக முடியும். மற்றவர்களை நம்பி செல்வதையும் செயல்படுவதையும் குறைத்துக் கொள்வது சிக்கல்களை தவிர்க்க உதவும்.சனி ராசிக்கு இரண்டாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் வழியில் மாறுபட்ட அனுபவமும் ஆதாயமும் கிடைக்க பெறுவீர்கள். பொன் பொருள்கள் இடத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். தாய் வழி உறவுகள் இடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பதிவு செய்வது நன்மதிப்பை உருவாக்கும். உழைப்பின் மூலம் புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதுவிதமான உணவுகள் மீது ஆர்வம் உண்டாகும்.குடும்பம் மற்றும் பெண்களுக்கு,குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். பலதரப்பட்ட நபர்களின் அறிமுகங்கள் கிடைக்க பெறுவீர்கள். பெண்கள் தங்கள் துணைவரிடத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுப காரிய நிகழ்ச்சிகள் சாதகமாக அமையும். பொருளாதார விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். வெளி உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். மற்றவர்களை நம்பி வெளியில் செல்வதை குறைத்துக் கொள்வது நன்மை தரும். சிறு மற்றும் குறுந்தொழிலில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும்.

மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆராய்ச்சி துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும். எதிர்காலம் குறித்த புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும்.உத்தியோகஸ்தர்களுக்கு,உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும்.முயற்சிக்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். எதிர்பாராத சில உயர்வான செயல்கள் உருவாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்க பெறுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.வியாபாரிகளுக்கு,வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலைகள் விலகி சுறுசுறுப்பான சூழல் ஏற்படும். சீருடை பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். நெருப்பு சார்ந்த பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சுற்றுலா தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு சில நெருக்கடியான சூழல் உண்டாகும்.இயற்கை மருத்துவம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் அமையும். கல்லூரி மற்றும் சிறு வணிக துறைகளில் முயற்சி செய்வதனால் ஆதாயம் கிடைக்கும்.கலைஞர்களுக்கு,கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சில மாற்றமான சூழல்கள் உருவாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் நன்மை உண்டாகும்.உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.அரசியல்வாதிகளுக்கு,சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழலும் அதற்குண்டான வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பேச்சுகளில் பொறுமையை கையாளுவது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். மறைமுக வருமானங்களில் கவனம் வேண்டும். கருத்துக்களை பகிரும் போது தேவையான ஆவணங்களை வைத்துக் கொள்வது நன்மதிப்பை பெற வழிவகுக்கும்.நன்மைகள்,கும்ப ராசி அன்பர்களே! உங்களுடையசெயல்பாடுகளிலும் குண நலன்களிலும் இருந்துவந்த ஒரு சில பழக்க வழக்கங்கள் மாறும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள்.

நண்பர்களிடமும் துணைவர் இடத்திலும் இருந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.அரசு வழியில் தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான சூழல்கள் ஏற்படும்.கவனம்,கும்ப ராசி அன்பர்களே! உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். மூத்த உடன்பிறப்புகளிடம் சூழ்நிலை அறிந்து செயல்படுவது ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.வழிபாடு,பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகரை வழிபட்டு வர கருத்து வேறுபாடுகள் குறையும்.மேற்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்களே. அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம்உண்டாகும்.

மகர ராசி-2025 சனிப்பெயர்ச்சி பலன்கள்,

மகரம் ராசி அன்பர்களே..!!,மகர ராசி-சனிப்பெயர்ச்சி பலன்கள்,29.03.2025 முதல் 23.02.2028 வரை,திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில்,மகர ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்தார்.சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக ரிஷப ராசியான புத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான அயன சயன ஸ்தானத்தையும், பார்வையிடுகிறார்.. சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால், மனதளவில் புதுவிதமான கற்பனை சிந்தனைகள் அதிகரிக்கும். அறிவுத்திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும். விருப்பமான சில விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். கலைத்துறைகளில் இருப்பவர்களுக்கு உழைப்புகள் அதிகரிக்கும். பிரபலமானவர்கள் இடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குழந்தைகள் வழியில் சில மகிழ்ச்சியான செய்திகளும் சுப விரயங்களும் உண்டாகும்.சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதினால் நீண்டநாள் பிரார்த்தனைகள் குறித்த பயணங்களை மேற்கொள்வீர்கள். திறமைக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். உயர் கல்வி குறித்த ஆலோசனைகளால் தெளிவுகள் பிறக்கும். மனசஞ்சலங்களால் செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். குடும்பப் பெரியோர்கள் இடத்தில் அனுசரித்தும், அரவணைத்தும் செல்ல வேண்டும். அஞ்ஞான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சிறு வருவாயானாலும் சேமிப்பது நெருக்கடிகளை தவிர்க்க உதவும்.சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக, தனுசு ராசியான அயன சயன ஸ்தானத்தை பார்ப்பதினால் நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். வெளிநாட்டு பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும்.மனதளவில் சில தெளிவுகள் பிறக்கும். அரசு குறித்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்துவந்த போராட்டங்களும் தடுமாற்றமும் குறையும். வீண் விவாதங்களால் ஏற்பட்ட சிக்கல்கள் மறையும். பலதரப்பட்ட மக்களின் அரவணைப்பும் ஒத்துழைப்பும் கிடைக்கும். https://youtube.com/@bmastro9982?si=THdwz-32lh_SrlOq

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்ப்பது நன்மை தரும்.சனி ராசிக்கு மூன்றாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் செய்யும் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். தன வரவுகளை மேம்படுத்துவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடி வரும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கமிஷன் துறைகளில் ஆதாயம் மேம்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இடம் மாற்றம் சார்ந்த எண்ணம் சாதகமாக கைகூடி வரும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பம் மற்றும் பெண்களுக்கு குடும்பத்தில் சுப காரியம் தொடர்பான முயற்சிகளும் எண்ணங்களும் கைகூடி வரும். தம்பதிகளுக்கு இடையே இருந்துவந்த வேற்றுமைகள் விலகும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் சாதகமாக முடியும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் மறையும். குறுகிய தூர பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகள் விலகி செல்லும். தொழில்நுட்ப துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும்.மாணவர்களுக்குகல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறைந்து சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பதற்கான உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் சில ஆதரவுகள் கிடைக்க பெறுவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு,உத்தியோகத்தில் எதிர்பார்த்த செலவு உயர்வுகளும் ஊதியமும் தடையின்றி கிடைக்கும். குடும்பத்தை விட்டு விலகி சென்றவர்கள்திரும்பி வருவதற்கான சூழல்கள் உருவாகும். வெளியூர் சென்று பணிபுரிவதற்கான சூழல்கள் சாதகமாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவு பெறும். https://youtube.com/@bmastro9982?si=DaOv5vLaJGehgpxu

உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் பொறுப்புகள் குறையும்.வியாபாரிகளுக்கு,வியாபாரத்தை காலத்திற்கு ஏற்ப நவீனமயமாக மாற்ற வேண்டும். வேலை ஆட்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். விளம்பர யுக்திகள் மூலம் நிலுவையில் உள்ள சரக்குகளை விற்று லாபத்தை பார்ப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் சற்று கவனம் வேண்டும். அயல்நாட்டு தொடர்பான வியாபார விஷயங்களில் அரசு நிலைப்பாடுகளை புரிந்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடம்இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பதிப்பகம், ஹோட்டல், மர வகைகளில் ஆதாயம் ஏற்படும். விவசாய பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். கால்நடைகள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். நவீன முறைகளை பயன்படுத்தி விளைச்சலை மேம்படுத்துவீர்கள்.கலைஞர்களுக்கு,கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய ஒப்பந்தங்களை விருப்பப்படிநிறைவேற்றி வைப்பீர்கள். சிந்தனைகளில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். நண்பர்கள் இடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். மூத்த கலைஞர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு,சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு செல்வாக்குகள் உயரும். சில நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். போட்டி சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். ரகசியமான சில செயல்கள் மூலம் ஆதாயமான பலன்கள் கிடைக்கும். கட்சி நிமித்தமான வீண் செலவுகள் இருந்தாலும் ஆதாயமான பலன்கள் பின்னாளில் கிடைக்கும். பத்திரிக்கை நிபுணர்கள் இடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்துவது உங்கள் மீதான நம்பிக்கைகளை மேம்படுத்தும்.நன்மைகள்,உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் குறித்த தயக்கமும் ஒரு விதமான புரிதல் இன்மையும் மறைந்துதெளிவுகள் பிறக்கும்.கவனம்,மகர ராசி அன்பர்களே நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படும். தந்தை மற்றும் உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். வெளிநாட்டு பயணங்கள் தாமதமாகிநிறைவேறும்.வழிபாடு,திருநள்ளாறு சென்று சனி தேவரை வழிபட்டு வர எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.மேற்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்களே. அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும்.https://youtube.com/@bmastro9982?si=lGmm5KpPXRYc3TAJ

துலாம் ராசி 2025..!! சனிப்பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசி அன்பர்களே..!! சனிப்பெயர்ச்சி பலன்கள் 29.03.2025 முதல் 23.02.2028 வரை (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில்) துலாம் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து ஆறாம் இடமான ரண ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். சனி தான் நின்ற ராசியிலிருந்து மூன்றாம் பார்வையாக ரிஷப ராசியான அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான அயன சயன ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான முயற்சி ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதினால் நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கேளிக்கை விஷயங்களில் கவனம் வேண்டும். வர்த்தக விஷயங்களில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். சிகிச்சை துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமும், ஊதிய உயர்வுக்கான சூழலும் உருவாகும். துணைவரின் ஆரோக்கிய விஷயங்களை சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வியாபார வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான அயன சயன ஸ்தானத்தை பார்ப்பதினால் வெளியூர் பயண வாய்ப்புகளில் சில மாற்றங்கள் ஏற்படும். இரவு நேர பணி விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. மறைமுக விஷயங்கள் மீது தனிப்பட்ட ஆர்வமும் தேடலும் உருவாகும். குற்றப்பிரிவு துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவமும் சில மாற்றங்களும் கிடைக்கும். வியாபார அபிவிருத்தி விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது நல்லது. வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். ரகசிய முதலீடுகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியான முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதினால் இளைய உடன்பிறப்புகளிடம் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். மனதளவில் சில தடுமாற்றங்களும் தயக்கங்களும் உருவாகும். எதிலும் விழிப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். தகவல் தொடர்பு துறைகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதில் ஒரு விதமான மந்த நிலைகள் உருவாகும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சனி ராசிக்கு ஆறாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் விலகும். எதிராக இருந்தவர்களும் விலகி செல்வார்கள். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பொருளாதாரத்தில் முன்னேற்றமும் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகளை குறைப்பதற்கான சூழல்கள் உருவாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நிதி நிறுவனங்கள் மற்றும் பங்கு வர்த்தகத்தில் ஆலோசனை பெற்று முதலீடுகளை மேற்கொள்ளவும். தூரதேச பயணம் சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும்.

குடும்பம் மற்றும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடத்திலிருந்து வந்த வேறுபாடுகள் குறையும். உடன் பிறந்தவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மை தரும். தாயிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். பேச்சுக்களில் இருந்த தடுமாற்றங்கள் மறையும். பெண்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை சார்ந்த சிக்கல்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். சிறு மற்றும் குறுந்தொழில் சார்ந்த முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். மாணவர்களுக்கு மாணவர்களுக்கு கல்வி சார்ந்த அடிப்படை விஷயங்களில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவுகள் பிறக்கும். பேச்சு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆராய்ச்சி கல்விகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளிநாடு மற்றும் வெளியூர் சென்று படிப்பது தொடர்பான எண்ணங்களில் சில விரயங்களுக்கு பின்பு சாதகமாக முடியும். விளையாட்டு விஷயங்களில் சில மாறுபட்ட அனுபவங்கள் மூலம் புதிய பக்குவம் பிறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் படிப்படியாக குறையும். விடாப்பிடியான முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் மீது தனிப்பட்ட ஆர்வங்கள் உருவாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்ல மதிப்பினைப் பெற்றுத் தரும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். பணி நிமித்தமான சிறு தூர பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் தடைப்பட்ட சில வரவுகள் சாதகமாகும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உருவாகும். விவசாய பணிகளில் நல்ல முன்னேற்றமான சூழல் உருவாகும். மனை மீதான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வேலையாட்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கனரக மற்றும் வாகன பயணம் சார்ந்த வியாபாரத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. இதுவரை புரியாத சில வியாபார நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகமும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கலைஞர்களுக்கு கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழலும், அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். சம்பள விஷயங்களில் இழுபறியான சூழல்கள் உருவாகும். முயற்சிகளில் இருந்துவந்த மந்த தன்மை விலகி எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். சிலர் மனதிற்கு பிடித்த விதத்தில் வீடுகளை வாங்கி மகிழ்வீர்கள். பின்னணி குரல் துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயமான சூழல் உருவாகும். அரசியல்வாதிகளுக்கு சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். நெருக்கடியாக இருந்துவந்த பல சிக்கல்கள் விலகி செல்லும். தொண்டர்களின் எண்ணங்களை புரிந்து செயல்பட்டு ஆதரவுகளை பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். கட்சி நிமித்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் ஏற்படும். நன்மைகள் துலாம் ராசி அன்பர்களே! இதுவரை சுபகாரிய விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும். மூத்த உடன்பிறப்புகள் அனுகூலமாக செயல்படுவார்கள். புத்துணர்ச்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். தன வரவுகளில் இருந்துவந்த ஏற்ற இறக்கங்கள் படிப்படியாக குறையும். கவனம் துலாம் ராசி அன்பர்களே முயற்சிகளில் சிறுசிறு தடைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்களும் அது சார்ந்த கவலைகளும் மனதில் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களில் சிறுசிறு மாற்றங்களால் செயல்களில் தாமதம் ஏற்படும். வழிபாடு சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபட்டு வர மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேற்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்களே. அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும்.

தனுசு ராசி 2025..!! சனிப்பெயர்ச்சி பலன்கள்

தனுசு ராசி அன்பர்களே..!! சனிப்பெயர்ச்சி பலன்கள் 29.03.2025 முதல் 23.02.2028 வரை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தனுசு ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து நான்காம் இடமான அர்த்தஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். தனுசு ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து நான்காம் இடமான அர்த்தஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். சனி தான் நின்ற ராசியிலிருந்து மூன்றாம் பார்வையாக ரிஷப ராசியான ரண ரோக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான கர்ம ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான ராசி ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக ரண ரோக ஸ்தானத்தை பார்ப்பதினால் புதிய முயற்சிகளில் எதிர்பாராத சில திருப்பங்கள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உதவிகள் மற்றும் கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். போட்டி சார்ந்த விஷயங்களில் திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உணவு பழக்க வழக்கங்களில் சற்று கவனம் செலுத்த வேண்டும். பங்காளிகள் இடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான கர்ம ஸ்தானத்தை பார்ப்பதினால் ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தர்ம காரியங்களில் மனம் லயப்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவங்கள் மூலம் சில பக்குவங்கள் உருவாகும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது மன அமைதிக்கு வழிவகுக்கும். அரசு குறித்த சில நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில சஞ்சலங்களும் தடுமாற்றமும் ஏற்படும். எதிலும் ஆர்வம் இன்றி செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியான ராசி ஸ்தானத்தை பார்ப்பதினால் குணநலங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பெற்றோர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வளர்ப்பு பிராணிகளிடம் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் உருவாகும். உடல் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகளும் தெளிவுகளும் பிறக்கும். சனி ராசிக்கு நான்காம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் சொத்து மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். பெற்றோர்களின் ஆலோசனைகளும் ஆசீர்வாதங்களும் கிடைக்கும். தாய்மாமன் வழி உதவிகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் தீர்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு பழைய கடன்கள் ஓரளவு குறையும். கால்நடை வளர்ப்பு துறைகளில் வருமானங்கள் அதிகரிக்கும். வீடு விரிவாக்க பணிகளில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களின் சேர்க்கைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தனிப்பட்ட ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆரோக்கிய பிரச்சனைகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும். விருப்பமான வண்டி மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

குடும்பம் மற்றும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியான தருணங்களும் உருவாகும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உங்கள் பேச்சுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பெண்களுக்கு சுப காரியம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். தடைப்பட்ட சில வருவாய்கள் மீண்டும் கிடைக்க பெறுவீர்கள். குறுந்தொழிலில் ஆர்வமும் உத்வேகத்துடனும் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேம்படும். மாணவர்களுக்கு மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த குழப்பங்கள் நீங்கி நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நுட்பமான சில விஷயங்களை எளிமையாக புரிந்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் உழைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி கல்வியில் இருந்த தாமதங்கள் நீங்கி எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உயர்நிலை கல்வி மற்றும் முதுநிலை கல்வியில் தடைப்பட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பொறுப்புகள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பணி மாற்ற விஷயங்களில் பொறுமை காப்பது நல்லது. பணி நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். உடன் இருப்பவர்களால் சில நெருக்கடியான சூழல்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைப்பதில் அலைச்சலும் தாமதமும் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமையை கையாள்வது நல்லது. பணி நிமித்தமான பயணங்களில் இருந்த தாமதங்கள் குறையும். செயல்பாடுகளில் சில நேரங்களில் ஆர்வமின்மை மற்றும் சோர்வு வெளிப்படும். வியாபாரிகளுக்கு வியாபார விஷயங்களை சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வேலை ஆட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விவசாய பணிகளில் உழைப்புக்கு ஏற்ப லாபங்கள் கிடைக்கும். நிபுணர்களின் ஆலோசனைகள் விளைச்சலை அதிகப்படுத்த உதவும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உதிரி பாகங்கள் மற்றும் கமிஷன் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவங்களும் புதிய துறை சார்ந்த இலக்குகளும் உருவாகும். கலைஞர்களுக்கு கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பேச்சுக்களில் இருந்துவந்த தடுமாற்றங்கள் விலகும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மூத்த கலைஞர்களிடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். பிற மொழி மக்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வரவுகளில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகமும் ஒத்துழைப்பும் கிடைக்க பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சமூகப் பணிகளில் இருப்பவர்கள் எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். பழைய செயல்களால் ஒரு விதமான தடுமாற்றம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தொண்டர்கள் மற்றும் பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். வருவாயில் இருந்துவந்த ஏற்ற இறக்கம் குறையும். நெருக்கமானவர்கள் பற்றிய சில புரிதல்கள் அதிகரிக்கும். போட்டியாக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். எதிர்பாராத கட்சி நிமித்தமான பயணங்களால் அலைச்சலும் உடலில் ஒரு விதமான சோர்வுகளும் ஏற்பட்டு நீங்கும். நன்மைகள் தனுசு ராசி அன்பர்களே! சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். தந்தையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக விலகும். கவனம் தனுசு ராசி அன்பர்களே! அனுபவம் இல்லாத புதிய செயல்களில் ஈடுபடும் போது ஆலோசனை பெற்று செயல்படவும். ஜாமின் மற்றும் கடன் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது சிக்கல்களை குறைக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். வழிபாடு வராகி அம்மனை வழிபட்டு வர முயற்சியில் இருந்துவந்த தடைகள் விலகும். மேற்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்களே. அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும்.

குருபெயர்ச்சி பலன்கள் 2025

குருபெயர்ச்சி பலன்கள். 1. மேஷம் Aries,மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள் வரும், ஆனால் மகிழ்ச்சி குறையாது. மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். பூர்வீகச் சொத்துகள் குவியும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். சகல வகையிலும் லாபம் உண்டாகும். 2. ரிஷபம் Taurus : ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். மருத்துவச் செலவுகள் குறையும். அயல்நாட்டுப் பயணங்கள் செல்லலாம்.. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். 3. மிதுனம் (Gemini): மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி குழந்தை பாக்கியத்தை தரும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்தால் ஆதாயம் பெறலாம்.  கணவன்-மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். பண வரவு ஏற்படும். 4. கடகம் (Cancer): கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். தாய்வழிச் சொத்துகள் கிடைக்கும்.பழைய கடனில் இருந்து விடுப்படலாம். பணவரவு உண்டாகும். 5. சிம்மம் (Leo): சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் மன கசப்பு உணர்வு நீங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தையரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பண வரவு ஏற்படும். 6. கன்னி (Virgo): கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வரவேண்டிய பணம் வரும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும்.வங்கிக் கடன் கிடைக்கும் 7. துலாம் (Libra): துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். கணவன்-மனைவி மனம் விட்டுப் பேசுவீர்கள். சொத்துச் சேர்க்கை ஏற்படும், 8. விருச்சிகம் (Scorpio): விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு ஏற்படும். வீடு பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். 9. தனுசு (Sagittarius): தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பண வரவு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள், 10. மகரம் (Capricorn): மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சந்தோஷம் நிரம்பியிருக்கும். பண வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம். பணிச்சுமை அதிகரிக்கும் அலுவலகரீதியாக வெளியூர் பயணம் செல்லலாம். 11. கும்பம் (Aquarius): கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் புது உத்வேகம் பிறக்கும். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். 12. மீனம் (Pisces): மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! 2025 சனிப்பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! சனிப்பெயர்ச்சி பலன்கள் 29.03.2025 முதல் 23.02.2028 வரை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் விருச்சிக ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். சனி தான் நின்ற ராசியிலிருந்து மூன்றாம் பார்வையாக ரிஷப ராசியான களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான லாப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான குடும்ப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உருவாகும். நண்பர்கள் இடத்தில் சிறு இடைவெளியை மேற்கொள்வது நல்லது. வர்த்தக விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். கமிஷன் துறைகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உருவாகும். சுப காரியம் தொடர்பான செயல்களில் அலைச்சல்கள் உண்டாகும். சிற்றின்ப செயல்களால் கையிருப்புகள் குறையும். அடி வயிறு மற்றும் பிறப்புறுப்பு இடங்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான லாப ஸ்தானத்தை பார்ப்பதினால் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் சற்று சிந்தித்து செயல்படவும். சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் ஏற்படும். செய் தொழிலில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். முதலாளி இடத்தில் அனுசரித்து செல்வது ஆதாயமான பலன்களை பெற்றுத் தரும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிர்பார்த்த சில விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உருவாகும். சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியான குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதினால் குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். விதண்டாவாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பொன் ஆபரணங்கள் மீது ஒரு விதமான ஆர்வமின்மை ஏற்படும். மற்றவர்களும் புண்படும்படியான செயல்களை குறைத்துக் கொள்வது உங்கள் மீதான நம்பிக்கைகளை மேம்படுத்தும். உழைப்புக்கு உண்டான வரவுகள் ஏற்ற இறக்கத்துடன் கிடைக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். சனி ராசிக்கு ஐந்தாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் விளையாட்டு செயல்களில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனை போக்கில் மந்த தன்மை ஏற்படும். குழந்தைகளின் செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது. கல்வி சார்ந்து குடும்பத்தை விட்டு விலகி செல்வதற்கான சூழல்கள் அமையும். பணி சார்ந்த முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பாகப்பிரிவினை சார்ந்த முயற்சிகள் சாதகமாக முடியும். பிரபலமானவர்களின் தொடர்புகள் உண்டாகும். குலத்தொழில் குறித்த சிந்தனைகள் மேம்படும். கவுரவ பொறுப்புகள் மூலம் மதிப்புகள் உயரும். நெடுந்தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வெளிவட்டாரங்களில் அலைச்சல்கள் இருந்தாலும் அதற்குண்டான ஆதாயம் கிடைக்கும். குடும்பம் மற்றும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்தும் அரவணைத்தும் செல்வது மன அமைதியை கொடுக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பெண்கள் மற்றவர்களின் செயல்பாடுகள் குறித்து பேசுவதை தவிர்ப்பது நல்லது. பழைய விஷயங்களை எண்ணாமல் இருப்பது மனதளவில் புதிய நம்பிக்கைகளை உருவாக்கும். துணைவர் இடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். நண்பர்கள் இடத்தில் குடும்ப விஷயங்கள் பகிர்வதை குறைக்கவும். மாணவர்களுக்கு மாணவர்களுக்கு கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். விளையாட்டு துறையில் அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். வெளிநாடு சென்று படிப்பது தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவுடன் காணப்படுவீர்கள். எதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு நினைத்ததை முடிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஆராய்ச்சி கல்வியில் சாதகமான வாய்ப்புகளும் திறமைக்கு உண்டான மதிப்புகளும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் சாதகமாக முடியும். பணி சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பகிர்வது நன்மையை தரும். சிறு வருவாயாக இருந்தாலும் திறமைகளை வெளிப்படுத்துவது நல்ல ஒரு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டானாலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். கடன் உதவிகளில் இருந்துவந்த இழுபறிகள் அடிப்படையாகக் குறையும். சிறு வருவாயாக இருந்தாலும் அதை சேமித்து வைப்பது நல்லது. விவசாய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பாசன தொடர்பான விஷயங்களை அறிந்து புதிய பயிர்களை பயிரிடுவது நல்லது. கலைஞர்களுக்கு கலைத்துறையில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மை தரும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். முயற்சிகளில் இருந்துவந்த தடுமாற்றங்கள் ஓரளவு குறையும். வெளிநாட்டு வாய்ப்புகளில் இருந்த தாமதங்கள் நீங்கி சாதகமான சூழல் அமையும். அரசியல்வாதிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் விலகி எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகளும் புதிய பொறுப்புகளும் கிடைப்பதற்கான தருணங்கள் உருவாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளவும். பேச்சுகளில் கண்ணியத்தை பின்பற்றுவது நன்மையே பெற்று தரும். சலனமான சிந்தனைகளால் பதவிகளில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நன்மைகள் விருச்சிக ராசி அன்பர்களே! இதுவரை தடைப்பட்ட சில உதவிகளும் கடன் சார்ந்த முயற்சிகளும் கைகூடி வரும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழல்கள் மறையும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடுமாற்றங்கள் விலகி புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கவனம் விருச்சிக ராசி அன்பர்களே! வருமானம் குறித்த செயல்களில் கவனம் வேண்டும். சுபகாரிய செயல்களில் விவேகத்துடன் செயல்பட்டு முடிவெடுப்பது நன்மை தரும். மூத்த உடன்பிறப்புகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வழிபாடு நாமக்கல்லில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபட்டு வர சிந்தனை வளம் பெருகும். மேற்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்களே. அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே..!! 2025 சனிப்பெயர்ச்சி பலன்கள்

கன்னி ராசி அன்பர்களே..!! சனிப்பெயர்ச்சி பலன்கள் 29.03.2025 முதல் 23.02.2028 வரை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கன்னி ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து ஏழாம் இடமான சப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். சனி தான் நின்ற ராசியிலிருந்து மூன்றாம் பார்வையாக ரிஷப ராசியான பாக்கிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான ராசி ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான சுக ஸ்தானத்தையும், பார்வையிடுகிறார். சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதினால் புதுமையான செயல்கள் மற்றும் புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதளவில் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் சாதகமாக அமையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புக்கள் மேம்படும். மாமியார் இடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படுவது நன்மை தரும். மின்துறை சார்ந்த பணிகளில் நேர்மறையான சூழல்கள் உண்டாகும். புனித பயண எண்ணங்கள் கைகூடி வரும். முழங்கால்களில் இருந்துவந்த சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான ராசி ஸ்தானத்தை பார்ப்பதினால் தோற்றப்பொலிவுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்படும் விதத்தில் அனுபவங்கள் வெளிப்படும். செல்வாக்கு விஷயங்களில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். தனித்திறமைகளை வெளிப்படுத்தினாலும் அதற்கான அங்கீகாரங்கள் தாமதமாக கிடைக்கும். எந்த ஒரு செயல்களிலும் முழுமையான ஈடுபாடு என்பது குறைவுபடும். வேலையாட்கள் இடத்தில் தட்டிக் கொடுத்து செயல்படுவது நன்மை தரும். தற்பெருமையான பேச்சுக்களை முடிந்த அளவு தவிர்க்கவும். சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியான சுக ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிலும் திருப்தி இன்மையான சூழல்கள் உண்டாகும். தாய் வழியில் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும். கல்விப் பணிகளில் சற்று கவனம் வேண்டும். புதுவிதமான தொழில்கள் மீது ஆர்வங்கள் ஏற்படும். ஆயினும் சூழ்நிலை அறிந்து முயற்சிகளை மேற்கொள்வது தேவையற்ற கால விரயத்தை தவிர்க்கும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். உடல் நலம் சார்ந்த விஷயங்களில் பொறுப்புடன் செயல்படவும். பெருந்தன்மையான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்த வழி வகுக்கும். வழக்கு சார்ந்த செயல்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சனி ராசிக்கு ஏழாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் குடும்ப உறுப்பினர்களிடத்தில் மனம் விட்டு பேசுவது புரிதலையும் ஒற்றுமையும் மேம்படுத்தும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். செயல்களில் ஒருவிதமான தைரியமின்மை வெளிப்படும். முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இதுவரை செல்லாத புதுவிதமான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல்கள் உருவாகும். துணைவரிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வித்தியாசமான கற்பனை சார்ந்த எண்ணங்கள் மனதளவில் அதிகரிக்கும். சஞ்சலங்களை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் மற்றும் அதன் மீதான முதலீடுகளை உருவாக்குவதற்கான சூழல்கள் அமையும். குடும்பம் மற்றும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். மனதிற்குப் பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான தருணங்கள் ஏற்படும். தாயிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். ஆரோக்கிய விஷயங்களை சற்று கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவரிடத்தில் வீணான வாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. பெண்கள் மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். சிறு மற்றும் குறுந்தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சிறு தூர பயணங்கள் மூலம் மனதளவில் மாற்றமும் சில பக்குவங்களும் பிறக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்து குழப்பங்கள் குறையும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆராய்ச்சி கல்வியில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வங்கி கடன் சார்ந்த செயல்களில் தெளிவு பெற்ற பின் முயற்சிகளை மேற்கொள்ளவும். ஆசிரியர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். விளையாட்டுப் போட்டிகளில் இருந்துவந்த ஆர்வமின்மைகள் குறையும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பணியில் இருந்துவந்த தடுமாற்றங்கள் குறையும். இடமாற்ற முயற்சிகள் சாதகமாக அமையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சக ஊழியர்கள் இடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மனதில் மேம்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரிகளுக்கு வியாபார பணிகளில் ஆதாயமான பலன்கள் ஏற்படும். மாற்றமான அணுகுமுறைகள் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடைவீர்கள். வியாபாரம் நிமித்தமான சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொண்டு லாபத்தை மேம்படுத்துவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வியாபாரங்களில் கொள்முதல் பொருட்களில் கவனம் வேண்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் மீதான சந்தேகங்களை அவ்வப்போது நிவர்த்தி செய்து கொள்வது மன அமைதியை ஏற்படுத்தும்.எதிர் பாலின மக்களால் சஞ்சலங்களும் சில மாற்றங்களும் ஏற்படும். கலைஞர்களுக்கு கலைத்துறையில் இருப்பவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழலும் அதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும். ஊதியம் மற்றும் நிலுவையில் இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். குடும்பத்திடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீக்கி ஒற்றுமை உண்டாகும். மனதளவில் இருந்துவந்த தடுமாற்றங்கள் ஓரளவு குறையும். இருப்பினும் எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயமான சூழல் ஏற்படும். பழைய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.மறைமுக வருமான விஷயங்களில் விழிப்புணர்வு தேவை. ஆவணம் மற்றும் ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்களும் தடைகளும் மறையும். வரவுகளில் இருந்த தாமதங்கள் படிப்படியாக குறையும். பலதரப்பட்ட மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்க பெறுவீர்கள். நன்மைகள் கன்னி ராசி அன்பர்களே, எதிர்காலம் குறித்த கவலையும் தயக்கங்களும் ஓரளவு குறையும். செய்யும் முயற்சிகளில் இருந்த தடுமாற்றங்கள் மறையும். செயல்பாடுகளில் அனுபவங்கள் வெளிப்படும். தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கவனம் கன்னி ராசி அன்பர்களே, உயர் அதிகாரிகள் இடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பகிர வேண்டும். மனதில் தோன்றியதை வெளிப்படுத்தும் போது கவனம் வேண்டும். வாகன பயணங்கள் மற்றும் கால்நடை தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது நன்மை தரும். வழிபாடு திருக்கடையூர் சென்று அமிர்தகடேஸ்வரரை வழிபட்டு வர தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேம்படும். மேற்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்களே. அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும்.

சிம்மம் 2025 சனிபெயர்ச்சி பலன்கள்

சிம்மம் ராசி அன்பர்களே..!! சனிப்பெயர்ச்சி பலன்கள் 29.03.2025 முதல் 23.02.2028 வரை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சிம்ம ராசிக்கு ஏழாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். சனி தான் நின்ற ராசியிலிருந்து மூன்றாம் பார்வையாக ரிசப ராசியான கர்ம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான புத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக கர்ம ஸ்தானத்தை பார்ப்பதினால் வியாபாரம் நிமித்தமான சில புதிய மாற்றங்கள் உருவாகும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். செய்யும் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். மாமியார் வழி உறவுகள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்ப்பது சிறப்பு. முழங்கால்களில் சிறு சிறு வலிகள் அவ்வவ்போது ஏற்பட்டு நீங்கும். செயல்திறனில் ஒரு விதமான சோர்வும் ஆர்வமின்மையும் உண்டாகும். உரம் விற்பனை பணிகளில் ஒரு விதமான மந்த நிலைகள் ஏற்படும். சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதினால் பேச்சுக்களில் பொறுமையை கையாள்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். நேரத்திற்கு அளவான உணவினை எடுத்துக் கொள்வது செயல்பாடுகளின் வேகத்தை அதிகப்படுத்த உதவும். விலை உயர்ந்த பொருட்களில் சற்று கவனம் வேண்டும். மற்றவர்கள் இடத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சலும் தாமதமும் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் அவ்வவ்போது ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய அளவிலான முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும். சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியான புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் வித்தியாசமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒரு விதமான தடுமாற்றம் ஏற்படும். குறும்படம் விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உல்லாச வாழ்க்கை மற்றும் பயணம் குறித்த எண்ணங்கள் மேம்படும். சில விஷயங்களில் அனுபவங்கள் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வமின்மை உண்டாகும். சிறு சிறு விஷயங்களாக இருந்தாலும் ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவீர்கள். எதிர் பாலின மக்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். சனி ராசிக்கு எட்டாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்யும் காலம் அஷ்டமத்து சனி ஆகும். இக்காலங்களில் உங்களைப் பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தொழில் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். பணி நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றமும் உண்டாகும். செய்யும் முயற்சிகளில் ஆர்வம் இன்மை உண்டாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். வசதி வாய்ப்புகளில் மாற்றம் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களால் சில விரயங்கள் ஏற்படும். குடும்பம் மற்றும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் சில தாமதங்கள் ஏற்படும். குழந்தைகள் இடத்தில் பக்குவமாக அரவணைத்து செல்வது நன்மை தரும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு சுய தொழில் நிமித்தமான விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். துணைவர் இடத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரம் குறித்த நிலைப்பாடுகளில் ரகசியம் காக்கவும்.

மாணவர்களுக்கு மாணவர்களுக்கு மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். அடிப்படைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு விதமான சோர்வும் மறதியும் அவ்வவ்போது ஏற்பட்டு நீங்கும். விளையாட்டுப் பணிகளில் திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்க பெறுவீர்கள். அரசு வகை உதவிகள் கிடைப்பதில் சில தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். நிர்வாகம் சார்ந்த கல்வியில் சில மாற்றங்களும் அனுபவங்களும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிபுரியும் இடத்தில் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்களும் அதற்கான முயற்சிகளும் அதிகரிக்கும். நுட்பமான சில விஷயங்களையும் புரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் அளவுடன் இருப்பது நல்லது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகளும் பதவி உயர்வுக்கான சூழல்களும் ஏற்படும். சக ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துக்கள் கூறுவது தவிர்ப்பது நன்மை தரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நிமித்தமான புதிய செயல் திட்டங்களும் ஆர்வங்களும் உருவாகும் சூழ்நிலைகளையும் சந்தை நிலவரங்களையும் அறிந்து முதலீடுகளும் மேற்கொள்வது நல்லது. ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும் கால்நடை மற்றும் தேக நலன் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். தந்தை வழி தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். உணவு தொழில்களில் தரமான பொருட்களை பயன்படுத்துவது வாடிக்கையாளர்களின் வரவினை மேம்படுத்தும். கலைஞர்களுக்கு கலைத்துறையில் இருப்பவர்கள் முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகளும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மூத்த கலைஞர்களிடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். அரசு வகையில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்களில் ஒரு விதமான மந்த நிலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு சமூக பணிகளில் இருப்பவர்கள் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் ஒரு சோர்வு ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் ஓரளவு குறையும். கட்சி நிமித்தமான மூத்த தலைவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நன்மதிப்பினை பெற்று தரும். தொண்டர்கள் இடத்தில் விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ள வேண்டும். கவனம் சிம்ம ராசி அன்பர்களே தந்தையிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதரவான சூழல் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உருவாகும். புதிய வீடு மற்றும் மனை அமைவதில் இருந்துவந்த சிக்கல்கள் விலகும். வழிபாடு சனிக்கிழமை தோறும் சிவபெருமானை வழிபட்டு வர இன்னல்கள் ஒரளவு குறையும். மேற்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்களே. அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும்.

Always4u
× How can I help you?